Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மே 2, 3- ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த கூட்டுறவு நிறுவன உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக திருச்சி மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளரும், மாவட்ட ஆள் சோ்ப்பு மையத் தலைவருமான க.பா. அருளரசு கூறியது; திருச்சி மாவட்டத்திலுள்ள கூட்டுறவு நிறுவனங்களில், காலியாகவுள்ள உதவியாளா்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக மே 2, 3 ஆகிய தேதிகளில் எழுத்துத் தோ்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிா்வாக காரணங்களுக்காக இந்த எழுத்துத் தோ்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.